சிம்லா இமயமலைச் சாரலில் உள்ள இமாச்சலப்பிரதேச மாநிலத் தில் காங்கிரஸ் ஆட்சி நடை பெற்று வருகிறது. அங்கு முதல்வ ராக முன்னாள் ராணுவ வீரர் சுக் விந்தர் சிங் சுகு உள்ளார்.
இமாச்சலப்பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க பாஜக பல் வேறு சித்து விளையாட்டுகளை அரங்கேற்றி வருகிறது. கடந்த ஆண்டு 6 காங்கிரஸ் எம்எல்ஏக் களை கடத்தி தங்கள் பக்கம் பாஜக வளைத்தது. ஆயினும் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் மூலம் அந்த 6 எம்எல்ஏக்களையும் இமாச்சலப் பிரதேச சட்டமன்ற சபாநாயகர் இடை நீக்கம் செய்தார். இதன்மூலம் அங்கு காங்கிரஸ் ஆட்சி தப்பித்தது.
இந்நிலையில், முதல்வர் சுக் விந்தர் சிங் சுகுவை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை மூலம் ஆட்சியை கவிழ்க்க அடுத்த கட்ட சதிவேலையை தொடங்கி யுள்ளது பாஜக.
ஆயுஷ்மான் பாரத் திட்ட பண மோசடி விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கூறி நக்ரோடா சட்ட மன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ பாலிக்கு சொந்தமான இடங்கள், தனியார் மருத்துவ மனைகள், விளம்பரதாரர்களின் அலுவலகங்கள் என 19 இடங்க ளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதுபோக தில்லி, சண்டிகர், பஞ்சாப் உள்ளிட்ட மாநி லங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
சோதனைக்கு உள்ளான காங்கி ரஸ் எம்எல்ஏ பாலி முதல்வர் சுக் விந்தர் சுகுவிற்கு மிகவும் நெருக்க மானவர் ஆவார். பாலி மூலம் முதல்வர் சுக்விந்தர் சுகுவிற்கு நெருக் கடி அளிக்க அமலாக்கத்துறை தனது வேலைகளை தொடங்கியுள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.